பாலமேடு ஜல்லிக்கட்டில் முறைகேடாக விளையாடிய 2 வீரர்கள்..!

பாலமேடு ஜல்லிக்கட்டில் முறைகேடாக விளையாடிய 2 வீரர்கள்..!

பாலமேடு ஜல்லிக்கட்டில் முறைகேடாக விளையாடிய 2 வீரர்கள்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டுடன்  மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விளையாடி இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருந்த வீரர்கள் முறைகேடாக விளையாடியதை வருவாய்த்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

மூடுவரப்பெட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் 8 காளைகளை பிடித்து இரண்டாவது இடத்தை இருந்த நிலையில், இவர் சக்கரவர்த்தி என்பவரின் பெயரில் வாங்கிய சீருடையை அணிந்து விளையாடி உள்ளார். அதேபோல் ஐந்து காளைகளைப் பிடித்து மூன்றாவது இடத்தில் உள்ள சின்னப்பட்டி சேர்ந்த தமிழரசன் என்பவர் மூடுவார்பட்டியை சேர்ந்த கார்த்தி என்பவரது சீருடையை மோசடியாக அணிந்து விளையாடியதை வருவாய் துறையினர் கண்டுபிடித்து உள்ளனர். இவர்கள் இருவரையும் வருவாய் துறையினர் கண்டுபிடித்த நிலையில் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube