டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி தற்கொலை செய்த மாணவன் 12 ஆம் வகுப்பு தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் 1024 ..!

டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி தற்கொலை செய்த மாணவன், 12 ஆம் வகுப்பு தேர்வில் 1024 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, தினேஷ் நல்லசிவன் என்ற மாணவர் தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தவும் டாஸ்மாக் கடைகளை மூடவும் வலியுறுத்தி கடிதம் எழுதிவைத்து, கடந்த 2 ஆம் தேதி நெல்லை வண்ணாரப்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று வெளியான 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவில், மாணவர் தினேஷ் 1024 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.