கனடாவில் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதி… சர்வதேச மாணவர்களுக்கு சிக்கல்!

Student Permit

கல்வி முறையின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் அரசின் உறுதிப்பாட்டை வலியுறுத்தும் வகையில், கனடாவில் கல்வி கற்பதற்காக செல்லும் இந்திய மாணவர்கள் உட்பட சர்வதேச மாணவர்களின் அனுமதி கட்டணம் உள்ளிட்ட தங்களின் செலவுகளை இரட்டிப்பாக அதிகரித்து அந்நாட்டு அமைச்சர் மார்க் மில்லர் அறிவித்துள்ளார். அதாவது, கல்வி கற்பதற்கான அனுமதிக்கு விண்ணப்பித்து கனடாவுக்கு வரும் சர்வதேச மாணவர்களுக்கான கட்டணம் உள்ளிட்ட செலவின் நிதி தேவையை இரட்டிப்பாக உயர்த்தி அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த நடைமுறை ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்றும் … Read more

கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்களுக்கு வெளியுறவுத்துறை எச்சரிக்கை…!

கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுரை. கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது.  அதன்படி, கனடா முழுவதும் இந்தியர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வரும் நிலையில் உஷாராக இருக்குமாறும், தங்களது விவரங்களை தூதரகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.

கனடாவில் சுட்டு கொல்லப்பட்ட இந்திய மாணவர்..!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் எனும் மாணவர் கனடாவில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு மேலாண்மை படிப்பு பயின்று வந்துள்ளார். இவர் சுரங்கப்பாதை ஒன்றின் வழியாக செல்லும் பொழுது அடையாளம் தெரியாத மர்ம நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் உயிரிழந்த கார்த்திக்கின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக இந்தியாவிற்கான கனட தூதரகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், தனது மகன் எப்படி உயிரிழந்தான் என்பது தெரியவில்லை, கனடா மிக பாதுகாப்பான நாடு … Read more

மான்களிடம் பரவு புதிய நோய் – அச்சத்தில் கனடா மக்கள்!

ஏற்கனவே கடந்த இரண்டு வருடங்களாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் பரவியுள்ள நிலையில், தற்போது கனடாவில் உள்ள ஆல்பர்ட் மாகாணத்தில் மான்கள் இடையே புதிய ஜாம்பி நோய் உருவாகி உள்ளதாக அமெரிக்க நோய்கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகள் மூளையின் கட்டுப்பாட்டை இழந்து, அசாதாரணமாக செயல்பட தொடங்குமாம். அதன் அறிகுறிகள் வித்தியாசமானதாக இருப்பதாகவும் மருத்துவ விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கனடாவில் உள்ள மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

அதிர்ச்சி…கனடாவில் 21 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட 5 இந்திய மாணவர்கள் பலி!

கனடாவின் டொராண்டோவில்  நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.கனடாவின் டொரன்டோவில் உள்ள நெடுஞ்சாலையில் பயணிகள் வேனில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் பயணம் செய்த போது,எதிரே வந்த டிராக்டரில் வேன் மோதி  விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து,கனடா காவல்துறை தகவலின்படி,உயிரிழந்த மாணவர்கள் மாணவர்கள் ஹர்பிரீத் சிங், ஜஸ்பிந்தர் சிங், கரன்பால் சிங், மோஹித் சவுகான் மற்றும் பவன் குமார் என அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் அனைவரும் கிரேட்டர் டொராண்டோ மற்றும் மாண்ட்ரீல் பகுதிகளில் படிக்கும் … Read more

ஒருவார சுற்றுப்பயணமாக அமெரிக்கா, கனடா செல்கிறார் தேவேந்திர பட்னாவிஸ்..!

மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அமெரிக்கா, கனடாவில் ஒருவார சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக மும்பையில் இருந்து விமானம் மூலம் இன்று புறப்பட்டு சென்றார். அமெரிக்காவில் நியூயார்க், வாஷிங்டன், சான்பிரான்சிஸ்கோ நகரங்களுக்கு செல்லும் அவர், அங்குள்ள பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை பார்வையிடுவதுடன் அந்த தொழில்நுட்பங்களை மகாராஷ்டிர மாநிலத்தில் கையாள்வது தொடர்பாக ஒப்பந்தம் செய்யவும் திட்டமிட்டுள்ளார். மேலும், மும்பை நகரை புனேவுடன் இணைக்கும் அதிநவீன சாலை வசதி தொடர்பான ஒப்பந்தத்தை செய்துள்ள விர்ஜின் குழுமத்தின் சான்பிரான்சிஸ்கோ நகர … Read more