நாளை முதல்…இவை கட்டாயம்;மீறினால் ரூ.500 அபராதம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னை:நாளை முதல் (ஜன.10 ஆம் தேதி) புறநகர் மின் ரயில்களில் பயணிக்க இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா பரவல் மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும்,கொரோனா கட்டுப்பாடுகளின்படி,புறநகர் ரயில் சேவைகள் 50% இருக்கை வசதியுடன் இயக்க அனுமதிக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில்,நாட்டில் நிலவும் தொற்றுநோய் சூழ்நிலையை கருத்தில் கொண்டும்,மத்திய … Read more

#Breaking:உணவகங்களில் இவை கட்டாயம் இடம் பெற வேண்டும் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னை:உணவகங்களில் புகார் தெரிவிக்க வேண்டிய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் இடம் பெறுவது கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மளிகைக் கடைகள்,உணவகங்களில் மக்கள் புகார் தெரிவிக்க வேண்டிய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் இடம் பெறுவது கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி,வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உணவு பாதுகாப்பு ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,உணவுக்கலப்படம் தொடர்பாக ஆய்வு நடத்தினால் மட்டும் போதாது,உணவில் கலப்படம் செய்தவர்கள் மீது … Read more

குட்நியூஸ்…”தமிழ்நாடு இளைஞர்களுக்கே 100% அரசுப் பணி;தமிழ்மொழித்தாள் கட்டாயம்” – தமிழ்நாடு அரசு அரசாணை!

தமிழ்நாடு இளைஞர்களுக்கே 100% அரசுப் பணி என்றும்,அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அரசாணை. தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ்மொழித் தகுதித் தாளினை அறிமுகம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு நிதி … Read more

“இரவில் இவற்றை நடத்தலாம்;ஆனால்,வீடியோ பதிவு கட்டாயம்” – மத்திய அரசு அனுமதி!

இரவில் உடற்கூராய்வுகளை நடத்த அனுமதி.ஆனால்,அவற்றை கட்டாயம் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நமது நாட்டில் விபத்துகளில் இறந்தவர்களின் உடல்கள் பொதுவாக பகல் நேரங்களில் மட்டுமே பிரேத பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்தன.இந்நிலையில்,மத்திய அரசு நேற்று பிரேத பரிசோதனைகளுக்கான (உடற்கூராய்வு) நெறிமுறைகளில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.அதன்படி,உடல் உறுப்பு திருட்டை தடுக்க இரவு நேர பிரேத பரிசோதனைகளுக்கு வீடியோ பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக,மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: “உடல் உறுப்பு திருட்டை … Read more