நேரடி விசாரணை ரத்து – உச்சநீதிமன்றம் திடீர் அறிவிப்பு!

டெல்லி:உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் நேரடி விசாரணை ரத்து செய்யப்படுவதாகவும்,மாறாக காணொலி மூலம் மட்டுமே வழக்கு விசாரணை நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாட்டில் டெல்டா கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில்,ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றும் வேகமாகப் பரவி வருகிறது.இதன்காரணமாக,உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் நேரடி விசாரணை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி,இன்று முதல் அடுத்த 2 வாரங்களுக்கு உச்சநீதிமன்றத்தில் காணொலி மூலம் மட்டுமே வழக்குகள் விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்ற பதிவுத்துறை … Read more

#Breaking:இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 600 ஐ தாண்டியது – மத்திய சுகாதாரத்துறை தகவல்!!.

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 653 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில்,இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 578 ஆக இருந்த நிலையில்,தற்போது 653 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 21 மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று பரவியுள்ள நிலையில்,அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 167 பேருக்கும்,டெல்லியில் 165 பேருக்கும்,கேரளாவில் 57 பேருக்கும்,தமிழகத்தில் 34 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி … Read more

#Breaking:இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 578 ஆக உயர்வு – மத்திய சுகாதாரத்துறை தகவல்!

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 578 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில்,தற்போது இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 578 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் 142 பேருக்கும்,மகாராஷ்டிராவில் 141 பேருக்கும், கேரளாவில் 57 பேருக்கும்,தமிழகத்தில் 34 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை  தெரிவித்துள்ளது. குறிப்பாக,ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 578 நபர்களில்,151 … Read more

இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல் – அரசு உத்தரவு!

டெல்லி:இன்று முதல் (இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை) இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில்,நாடு முழுவதும் இதுவரை ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 422 ஆக அதிகரித்துள்ளதாகவும்,ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து இதுவரை 130 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று தகவல் தெரிவித்தது. இதற்கிடையில்,அதிகரிக்கும் ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக அனைத்து மாநில அரசுகளுக்கும் இரவு … Read more

#Breaking:டிச.28 ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு -அரசு போட்ட உத்தரவு!

கர்நாடகா:டிச.28 ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு இரவு நேர(இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளதாக கர்நாடகா மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில்,நாடு முழுவதும் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 422 ஆக அதிகரித்துள்ளதாகவும்,ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து இதுவரை 130 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே,உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகள் விதிக்க அனைத்து … Read more

#Breaking:அதிர்ச்சி…சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தவருக்கு கொரோனா!

திருச்சி:சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது. இந்த வைரஸிற்கு பி.1.1.529 என மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டுள்ள நிலையில்,  இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. எனவே தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல நாடுகள் … Read more

ஒமைக்ரான் வைரஸ்:அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை!

சென்னை:ஒமைக்ரான் வைரஸ்,தமிழகத்தில் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார். தென் ஆப்ரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் உருமாறி பரவி வருகிறது. மருத்துவ நிபுணர்களால் பி.1.1.529 என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸுக்கு, ஓமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இந்த வைரஸ் சிங்கப்பூர், இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளிலும் பரவி உள்ளது.எனவே தென் ஆப்ரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளில் இருந்து … Read more