புதிய கொரோனாவிற்கு தடுப்பூசி தேவையா..? மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!

 உலகம் முழுவதும் பேரழிவை உருவாக்கிய கொரோனா வைரஸின் புதிய துணை மாறுபாடு JN.1 இந்தியாவிற்குள் நுழைந்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  கேரளாவில் முதலில் பரவிய பிறகு, கோவா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில்  வேகமாக அதிகரித்து வருகின்றன. இதனிடையே, மாநில அரசுகள் உஷாராக இருக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.  இந்நிலையில், JN.1கொரோனாவிற்கு தற்போது பூஸ்டர் டோஸ் அல்லது நான்காவது தடுப்பூசி போட வேண்டிய அவசியம் இல்லை என … Read more

செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் கவனத்திற்கு…! இன்று இலவச தடுப்பூசி முகாம்…!

இன்று உலக ரேபிஸ்   செல்லப்பிராணிகளுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது.  இன்று உலக ரேபிஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து செல்லப்பிராணிகளுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது. அனைத்து கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்களில் காலை 8 முதல் பகல் 12 மணி வரை ரேபிஸ் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. வீடுகளில் செல்லப் பிராணிகளை வளர்க்கும் பொது மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி செல்லப்பிராணிகளை நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்துமாறு கால்நடை பராமரிப்பு துறை … Read more

கோவிஷீல்ட் தடுப்பூசியால் ஏற்பட்ட மகளின் மரணம் தொடர்பாக இந்திய சீரம் நிறுவனம் மற்றும் பில் கேட்ஸ் மீது வழக்கு தொடர்ந்த தந்தை!!

எஸ்ஐஐ இன் கோவிஷீல்டு தடுப்பூசியின் பக்கவிளைவுகளால் தனது மகள் இறந்துவிட்டதாகக் கூறி ஒருவர் தாக்கல் செய்த மனுவில், பம்பாய் உயர் நீதிமன்றம், இந்திய சீரம் நிறுவனம் (எஸ்ஐஐ) மற்றும் தொழிலதிபர் பில் கேட்ஸிடம் இருந்து பதில் அளிக்க  கோரியது. மனுதாரர், திலீப் லுனாவத், கோவிட்-19 க்கு எதிரான தடுப்பூசியை தயாரிப்பதில் இந்திய சீரம் நிறுவனம் முயற்சிகளுக்கு நிதியளித்ததால், பில் கேட்ஸை வழக்கில் ஒரு குற்றவாளியாக சேர்த்ததாக, பார் அண்ட் பெஞ்ச் தெரிவித்துள்ளது. லுனாவத் தனது மனுவில் மருத்துவ … Read more

#BREAKING : இவர்களுக்கு ஜூலை 15-ஆம் தேதி முதல் 75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசம்..!

ஜூலை 15-ஆம் தேதி முதல் 75 நாட்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அனைவரும் தடுப்புச் செலுத்திக் கொள்ளுமாறும், முக கவசம் கட்டாயம் அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜூலை 15-ஆம் தேதி முதல் 75 நாட்களுக்கு … Read more

கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் 42 லட்சம் பேர் காப்பாற்றப்பட்டதாக ஆய்வு முடிவு..!

கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் 42 லட்சம் பேர் காப்பாற்றப்பட்டதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த இம்பீரியல் கல்லுாரி பேராசிரியர் ஆலிவர் வாட்சன் தலைமையிலான குழு, கொரோனா இறப்பு பற்றிய ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவு அறிக்கையை ‘தி லான்செட்’ மருத்துவ இதழில் வெளியிட்டது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டதால் ஏற்பட்ட பலன்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 185 நாடுகளில் தடுப்பூசி செலுத்தியதால் … Read more

#BREAKING: 12-14 வயது சிறுவர்களுக்கு நாளை மறுநாள் முதல் தடுப்பூசி -மத்திய அரசு அறிவிப்பு ..!

12-14 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் “பூஸ்டர் டோஸ்” நாளை மறுநாள் முதல் தொடங்கும் என்று மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே 14 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நாளை மறுநாள் குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என மத்திய சுகாதார அமைச்சர்  … Read more

நற்செய்தி: தடுப்பூசி போட்ட டிக்கெட்டில் தள்ளுபடி- இண்டிகோ அறிவிப்பு..!

இண்டிகோ ஏர்லைன்ஸ் தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு விமான  கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானப் பயணிகளுக்கு ஒரு நற் செய்தியை வெளியிட்டுள்ளது. அதுஎன்னவென்றால் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு விமான  கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த சலுகையின் பெயரை ‘வாக்ஸி ஃபேர்’ (​​’Vaxi Fare’) என அறிவித்துள்ளது. இந்த 10 சதவீத சலுகை உள்நாட்டு விமானங்களுக்கு மட்டுமே … Read more

தடுப்பூசி செலுத்தாவிட்டால் பள்ளிகளில் அனுமதி கிடையாது..! எங்கு தெரியுமா..?

ஹரியானாவில் 15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்கள் தடுப்பு செலுத்தவில்லை என்றால் பள்ளிக்கு வர அனுமதி இல்லை என்று ஹரியானா மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில்,  இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது 15 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு … Read more

நடிகை கீர்த்தி சுரேஷிற்கு கொரோனா தொற்று உறுதி..!

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், திரையுலக பிரபலங்கள் சிலர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை த்ரிஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் … Read more

தமிழகத்தில் 50,000 இடங்களில் 17-வது மெகா தடுப்பூசி முகாம்..!

தமிழகத்தில் 50 ஆயிரம் இடங்களில் இன்று 17வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தவேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் சனி அல்லது ஞாயிற்று கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது வரை 16 மெகா தடுப்பூசி முகாம்கள் நடந்துள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் 17-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று  நடைபெறுகிறது. 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் … Read more