இன்று உலக ரேபிஸ் செல்லப்பிராணிகளுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது.
இன்று உலக ரேபிஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து செல்லப்பிராணிகளுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது.
அனைத்து கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்களில் காலை 8 முதல் பகல் 12 மணி வரை ரேபிஸ் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. வீடுகளில் செல்லப் பிராணிகளை வளர்க்கும் பொது மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி செல்லப்பிராணிகளை நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்துமாறு கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் நடராஜகுமார் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.