சென்னை காவல் அருங்காட்சியகத்தை இன்று ஒருநாள் மட்டும் இலவசமாக பார்வையிட அனுமதி…!

சென்னை எழும்பூரில் உள்ள காவல் அருங்காட்சியகமத்தை இன்று ஒருநாள் மட்டும் இலவசமாக பார்வையிட அனுமதி. 

சென்னை எழும்பூரில் உள்ள காவல் அருங்காட்சியகம் திறக்கப்பட்டு, ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதனையடுத்து, இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய அனைத்து தரப்பினரும் இலவசமாக பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள் பொது மக்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் காவல் வாத்திய குழுவின் இசை நிகழ்ச்சி, காவல் மோப்ப நாய் கண்காட்சி, காவல் குதிரை கண்காட்சி, சிலம்பம், பொம்மலாட்டம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதுவரை மொத்தம் 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இந்த அருங்காட்சியகத்தை நேரில் பார்வையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment