#IPL2021: அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.. ஐபிஎல் தொடரில் இருந்து டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் விலகல்?

ஐபிஎல் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் விலகவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், கொரோனா பரவலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக வீரர்கள் உட்பட ஊழியர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அதனைதொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக ஐபிஎல் தொடர் எந்தவித தடையுமின்றி நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் … Read more

#IPL2021: இன்று டெல்லி – பெங்களூர் அணிகள் மோதல்.. முதலிடத்தை பிடிக்கப்போவது யார்?

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 22-வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடர் பாதுகாப்புடன், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 22-வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. நேருக்கு … Read more

அதிகரிக்கும் கொரோனா.. இந்திய கிரிக்கெட் வீராங்கனையின் தாயார் மரணம்!

இந்திய கிரிக்கெட் அணியில் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தியின் தாயார், கொரோனா பரவல் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 2.50 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், 1,95,213 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா கிரிக்கெட் அணியில் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தியின் தாயாருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவரின் தாயார் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து வேதாவின் … Read more

#IPL2021: கடும் சிக்கலில் ராஜஸ்தான் ராயல்ஸ்.. மேலும் ஒரு வெளிநாட்டு வீரர் விலகல்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஏற்கனவே 3 பேர் விலகியுள்ள நிலையில், தற்பொழுது அந்த அணியின் பந்துவீச்சாளர் ஆண்ரூ டை ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், கொரோனா பரவலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 20 போட்டிகள் முடிவடைந்தது. இதுவரை ஐபிஎல் தொடரில் இருந்து வெளிநாட்டு வீரர்கள் சிலர் விலகியுள்ளார். அந்தவகையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஏற்கனவே 3 பேர் … Read more

#IPL2021: தொடரில் இருந்து விலகும் வீரர்கள்.. பெங்களூர் அணியில் இருந்து 2 வீரர்கள் விலகல்!

ஐபிஎல் தொடரில் இருந்து ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வீரர்கள் ஆடம் ஜம்பா, கேன் ரிச்சர்டுசன் ஆகியோர் சில தனிப்பட்ட காரணங்கள் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், கொரோனா பரவலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 20 போட்டிகள் முடிவடைந்தது. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக வீரர்கள் உட்பட சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. … Read more

அதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. பி.எம். கேர்ஸ் நிதிக்கு ரூ.37.36 லட்சம் வழங்கிய பேட் கம்மின்ஸ்!

இந்திய மருத்துவமனைகளின் ஆக்சிஜன் தேவைக்காக பி.எம். கேர்ஸ் நிதிக்கு 50,000 டாலர் தொகையை வழங்கியதாக ஆஸ்திரேலியா வீரர் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 2.50 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனாவை வெல்ல பெரும் ஆயுதமாக தடுப்பூசியே உள்ளது. இந்நிலையில் … Read more

சூப்பர் ஓவரில் ஹைதராபாத் அடித்தது 8/0; ஆனால் கிடைத்தது 7/0.. காரணம் இதுதான்!

முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 8 ரன்கள் அடித்தது. ஆனால் 7 ரன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. அதற்கு Short Run-னே காரணம் என்று விளக்கமளிக்கப்பட்டது. ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 20-வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு டெல்லி அணி 159 ரன்கள் எடுத்தது. அதனைதொடர்ந்து 160 ரன்கள் எடுத்தால் … Read more

#IPL2021: பெங்களூர் அணி கேப்டன் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

கோலி தலைமையிலான பெங்களூர் அணி, சென்னை அணிக்கு எதிரான போட்டியில் குறிப்பிட்ட நேரத்தில் பந்தை வீசி முடிக்காத காரணத்தினால், ஐபிஎல் விதிமுறைப்படி ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழந்து 191 ரன்கள் … Read more

மே 1 முதல் இந்த மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி இலவசம்.. முழு பட்டியல் இதோ!

இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், மே 1-ம் தேதி முதல் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 17 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 2.50 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில் தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்பொழுது 45 … Read more

“நான் கொரோனாவை பரப்பப்போகிறேன்”- குழந்தைகள் உட்பட 22 பேருக்கு கொரோனாவை பரப்பிய நபர்!

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அலுவலகம் மற்றும் உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று, 22 பேருக்கு கொரோனா தொற்றை பரப்பியுள்ளார். உலகலைவில் கொரோனா பரவல் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில் ஸ்பெயின் நாட்டில் இதுவரை 3,468,617 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அந்நாட்டில் 77,591 பேர் உயிரிழந்துள்ளனர். அந்தவகையில், மல்லோர்காவை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்றின் அறிகுறிகள் இருந்தது. இதனையடுத்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். வழக்கமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டால், அவர்கள் … Read more