ரன்வேட்டையில் ரன் மெஷின் விராட் கோலி …!இங்கிலாந்து டெஸ்டில் அபார சதம் ..!

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதமடித்தார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 161 ரன்னில் சுருண்டது.168 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது.இன்றைய போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதமடித்தார்.  டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி அடித்துள்ள 23வது சதம் இதுவாகும்.தற்போது வரை இந்திய அணி 91.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து  281 ரன்களை அடித்துள்ளது.களத்தில் விராட் 102 ரன்கள் ரஹானே 16 ரன்களுடனும் உள்ளனர்.
DINASUVADU

Leave a Comment