ஆகஸ்ட் 28 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…!திமுக தலைவர் தேர்வு …! சிதைகின்றதா மு.க.அழகிரியின் கனவு?

திமுக தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க வரும் ஆகஸ்ட் 28  அன்று திமுகவின் பொதுக்குழு கூடுகிறது.
கடந்த 7 ஆம் தேதி தி.மு.க தலைவர் கலைஞர் சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார் என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
பின்னர்  ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கருணாநிதி மறைவிற்கு பின் முதல் செயற்குழு கூட்டம்:
திமுக அவசர செயற்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 14ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
Image result for மு.க.ஸ்டாலின்  கருணாநிதி
திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைந்த நிலையில் அந்த தலைமை பதவி காலியாக உள்ளது.ஏற்கனவே மு.க.ஸ்டாலின் செயல் தலைவர் பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செயற்குழுவிற்கு  முன்னதாக சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் குடும்பத்தினருடன் மு.க.அழகிரி அஞ்சலி செலுத்தினார்.
கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் அழகிரி கூறுகையில்,கருணாநிதியின் விசுவாசமான உடன்பிறப்புகள் என் பக்கம் தான் உள்ளனர.நான் திமுகவில் இல்லை, செயற்குழு குறித்து எதுவும் கூற முடியாது.என்னுடைய ஆதங்கம் குடும்பத்தை பற்றியது அல்ல, கட்சியை பற்றியது.என்னுடைய ஆதங்கத்தை அப்பாவிடம் தெரிவித்துள்ளேன்.எனது ஆதங்கம் என்ன என்பதை பின்னர் அனைவரும் அறிந்து கொள்வீர்கள் என்று அதிரடியாக தெரிவித்தார்.
Image result for முக ஸ்டாலின் முக அழகிரி
இதன் பின்னர் ஆங்கில தொலைகாட்சி ஒன்றுக்கு அவர் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில்,மு.க.ஸ்டாலினுக்கு நான்  தி.மு.க-வுக்குள் வருவதில் விருப்பமில்லை. நான் திமுகவுக்கு வந்தால் வலிமையான தலைவராகி விடுவேன் என அச்சப்படுகிறார்கள். திமுகவில் கட்சிப்பொறுப்புகள் விற்கப்படுகின்றது. திமுக தலைவர்கள் பலர் ரஜினிகாந்துடன் தொடர்பில் இருக்கிறார்கள் .இப்போம் உள்ள  கட்சியின் தலைமை தி.மு.க-வை சீரழித்துவிடும் என்றும் கோவமாகவும் தெரிவித்தார்.திமுகவில் இப்போதே பதவி போட்டியை மெரினாவில் இருந்து தொடங்கினார் மு.க.அழகிரி.மேலும் பல பிரச்சினைகள் திமுகவில் நிலவி வருகிறது.
இந்நிலையில் இன்று திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில்  ஆகஸ்ட் 28 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.
அதேபோல் காலை 9 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ள  திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வேண்டுகோள் விடுத்தார்.

இதன் பின்னர் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கூறுகையில், திமுக தலைவர், பொருளாளர் தேர்தல் தொடர்பாக முடிவெடுக்க ஆகஸ்ட் 28ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்.தணிக்கைக் குழு அறிக்கை தொடர்பாகவும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்  மு.க.அழகிரி மற்றும் மு.க.ஸ்டாலின் இடையேயான பிரச்சினையில் இந்த தேர்வு மிகவும் முக்கியமான ஓன்று ஆகும். செப்டம்பர் 5-ம் தேதி கருணாநிதி சமாதியை நோக்கி பேரணி செல்ல உள்ளதாக மு.க அழகிரி அறிவித்துள்ள நிலையில் திமுக பொதுக்குழு கூடுவது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.ஆகஸ்ட் 28ஆம் தேதி அன்றுதான் தலைவர் யார் என்று தெரியவரும் …
DINASUVADU
 

Leave a Comment