24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை!

சென்னை வானிலை ஆய்வு மையம் வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக  தெரிவித்துள்ளது.  வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள காற்றின் வேகம் மற்றும் திசை மாறுபாடு காரணமாக ஒருசில இடங்களில் மழை பதிவாகியுள்ளதாகவும், இதே காரணத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரையிலும் திருப்பூரில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்த வரையிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment