விஜய்மல்லையாவின் ரூ.963 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் ஏலம்!எஸ்பிஐ வங்கி அதிரடி நடவடிக்கை

தொழிலதிபர் விஜய்மல்லையாவுக்கு சொந்தமான சொத்துக்களை ஏலம்விட்டது எஸ்பிஐ வங்கி.

இந்தியாவில் உள்ள 13 வங்கியில் சுமார் ரூ.9000 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் வாங்கி மோசடி செய்து விட்டு தொழிலதிபர் விஜய் ,மல்லையா இங்கிலாந்து தப்பிச் சென்று விட்டார்.

இந்நிலையில்  தொழிலதிபர் விஜய்மல்லையாவுக்கு சொந்தமான ரூ.963 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஏலம்விட்டது எஸ்பிஐ வங்கி. விஜய்மல்லையா சுமார் ரூ.9000 கோடி வங்கிக்கடன் மோசடி செய்தது தொடர்பாக எஸ்பிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும்  லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment