லஞ்ச ஒழிப்பு போலீசார் திருமங்கலம் காவல் உதவி ஆணையர் கமீல் பாட்ஷா மீது 3 பிரிவுகளில் வழக்கு!

லஞ்ச ஒழிப்பு போலீசார், சென்னை திருமங்கலம் காவல் உதவி ஆணையர் கமீல் பாட்ஷா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமங்கலத்தில் உள்ள உதவி ஆணையர் அலுவலகத்தில் கடந்த 13ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையின் போது கணக்கில் வராத 5 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

பணம் எங்கிருந்து, எப்படி கிடைத்தது என்பதற்கான விளக்க கடிதம், உதவி ஆணையர் கமீல் பாட்ஷாவிடம் இருந்து பெறப்பட்டது. அதில் பணம் எப்படி வந்தது என்பது தமக்கு நினைவில் இல்லை என்று கமீல் பாஷா தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து கமீல் பாட்ஷா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர் விசாரணையை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்பு போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment