மு.க.அழகிரி புதிய கட்சி …!ஆலோசனைகள் மட்டும் நடைபெறுகிறது …!மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி

தனி அமைப்பு துவங்குவதாக இசக்கிமுத்து தெரிவித்தது, அவரது தனிப்பட்ட கருத்து என்று மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி தெரிவித்துள்ளார்.

அழகிரி’கலைஞர் எழுச்சி பேரவை’ என்ற புதிய அமைப்பை தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது .திமுக தலைமைக்கும்,மு.க அழகிரிக்கும் இடையே பனிப்போர் நடந்து வரும் இந்த சூழ்நிலையில் இத்தைகய தகவல் வெளியாகி வந்தது.

மேலும் இந்த பேரவை குறித்து முக அழகிரி காஞ்சிபுரம், சிவகங்கை மாவட்ட ஆதரவாளர்களை இன்றும் தஞ்சை, திருவாரூர் மாவட்ட ஆதரவாளர்களை நாளையும் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார் என்ற தகவலும் வெளியானது.

Related image

இந்நிலையில் இந்த தகவலை மு.க. அழகிரி மறுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகையில் கருணாநிதி பெயரில் புதிய அமைப்பு தொடங்க நான் ஆலோசனை செய்து வருவதாக இசக்கிமுத்து தெரிவித்தது அவரது சொந்த கருத்து என்கிறார் அழகிரி.

இதேபோல் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி உசிலம்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தனி அமைப்பு துவங்குவதாக இசக்கிமுத்து தெரிவித்தது, அவரது தனிப்பட்ட கருத்து என்றார். அதேநேரம், ஆலோசனைகள் மட்டும் தற்போது நடைபெற்று வருவதாகவும் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி தெரிவித்தார்.

Leave a Comment