நீட் தோல்வியால் மாணவி பிரதீபா உயிரிழந்தது வருத்தமளிக்கிறது!ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த், மாணவி பிரதீபா உயிரிழந்தது குறித்து வேதனை தெரிவித்த நிலையில், நீட் தேர்வால் உயிர்ப்பலிகள் தொடர்வது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும்  நடிகர் ரஜினிகாந்த்,காலா படத்திற்கு எதிர்ப்புகள் அதிகம் வரும் என்று எதிர்பார்த்ததாகவும், எதிர்பார்த்ததை விட எதிர்ப்புகள் குறைவுதான் என்றும்  தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியது , காவிரி விஷயத்தில் பேசி தீர்வு கண்டால் நல்லது என்றும், கர்நாடக முதலமைச்சரை கமல் சந்தித்ததில் தவறில்லை என்றும் தெரிவித்தார்.

காலா படம் வெளியீடு குறித்து கர்நாடக அரசு ஏற்பாடு செய்யும் என நம்புவதாகத் தெரிவித்த ரஜினிகாந்த், படத்தை தடைசெய்ய தேவகவுடா விடமாட்டார் என்று குறிப்பிட்டார்.

அரசியலையும் தொழிலையும் ஒன்றுபடுத்தி பார்ப்பது சரியல்ல என்றும் ஆனால் இங்கே இரண்டையும் ஒன்றாகவே பார்க்கிறார்கள் என்றும் ரஜினிகாந்த் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment