தொழில் வளர்ச்சி தமிழகத்தில் இல்லை என்பது தவறான கருத்து!மீன்வளத்துறை  அமைச்சர் ஜெயக்குமார்

தொழில் வளர்ச்சி தமிழகத்தில் இல்லை என்பது தவறான கருத்து என்று மீன்வளத்துறை  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், தமிழகம் தொழில் செய்வதற்கான உகந்த மாநிலம் என்பதை தக்க வைத்துக்கொண்டுதான் இருக்கிறது.தமிழகத்திற்கே தொழில் முனைவோர் அதிகம் வருவது தமிழகத்திற்கே என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக  மத்திய அரசு தொழில் தொடங்க உகந்த மாநிலங்களில் பட்டியலை நேற்று வெளியிட்டது.இந்த பட்டியலில் தொழில் செய்ய உகந்த மாநிலங்களில் தமிழகத்திற்கு 15ஆம் இடம், ஆந்திர பிரதேசத்திற்கு முதலிடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment