ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்னும் சில ஆண்டுகளுக்கு ஆடுவேன் : ஏ.பி.டி.வில்லியர்ஸ்..!

ஏ.பி- டி – வில்லியர்ஸ் (Abraham Benjamin de Villiers), , தென்னாபிரிக்கா கிரிக்கெட்  அணியின் விக்கெட் கீப்பர்  மற்றும் பேட்ஸ்மேன்  ஆவார். இவர் டைடன்ஸ் அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த மட்டையாளார்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் பல சாதனைகளைப் புரிந்துள்ளார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்  போட்டிகளில் அதி விரைவாக 50, 100, 150 ஓட்டங்கள் அடித்த தென்னாப்பிரிக்கா வீரர் எனும் சாதனையையும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் அதிவிரைவாக 50 ஓட்டங்கள் எடுத்த தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனைகளைப் படைத்துள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

Image result for ஏ.பி.டி.வில்லியர்ஸ்சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சமீபத்தில் ஓய்வு அறிவித்த தென் ஆப்பிரிக்க அதிரடி பேட்ஸ்மென் ஏ.பி.டி.வில்லியர்ஸ் தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடுவாரா ஆடமாட்டாரா என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. அதற்க்கு அவர் அளித்த பதில்

Image result for ஏ.பி.டி.வில்லியர்ஸ்“ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்னும் சில ஆண்டுகளுக்கு ஆடுவேன், அதே போல் டைட்டன்ஸ் அணிக்கு ஆடி இளம் வீரர்களை ஊக்குவிக்க விரும்புகிறேன் என்று கூறினார்.

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் 360 டிகிரி அதிசயங்களுடன் அவர் மீண்டும் நம்மை மகிழ்விக்க வருகிறார்” என்று பதிவிட்டுள்ளது.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment