தமிழ்நாடு திரும்ப வாய்ப்பில்லை!மேற்குவங்கத்தில் ரஜினிகாந்த் பேச்சு

நடிகர் ரஜினிகாந்த் இன்னும் ஒருமாதம் தமிழ்நாடு திரும்ப வாய்ப்பில்லை என்றும் டார்ஜிலிங் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நடைபெற படப்பிடிப்புகளில் கலந்துக் கொள்ள உள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் காலா படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்புக்காக மேற்குவங்க மாநிலத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு படப்பிடிப்பு நடைபெறும் குர்சியாங் மலைப்பகுதியில் மாநில சுற்றுலாத் துறை அதிகாரிகள் ரஜினிகாந்தை சந்தித்தனர். முதலமைச்சர் மம்தா பானர்ஜி சார்பில் ரஜினிக்கு அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் காலா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதாக கூறினார் கர்நாடகத்திலும் அரசு ஒத்துழைப்புடன் காலா படம் நன்றாக ஓடிக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment