தமிழகத்தை கருப்பு, வெள்ளை, சிவப்புதான் ஆட்சி செய்யும்; காவிக்கு இங்கே இடமில்லை…!

தமிழகம் காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் தகித்து கிடக்கிறது. உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கிய பின்னரும் கர்நாடக மாநில தேர்தலை மனதில் கொண்டு மேலாண்மை வாரியத்தினை அமைத்திடாமல் அப்பட்டமான துரோகத்தினை தமிழர்களுக்கு இழைத்துவிட்டதே மத்திய அரசு என சீற்றம் கொண்டு ஆங்காங்கே தன்னெழுச்சியாக திரண்டு போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

அதே சமயம், உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கிய பின்னரும் கர்நாடக மாநில தேர்தலை மனதில் கொண்டு மேலாண்மை வாரியத்தினை அமைத்திடாமல் மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் அளித்திடவில்லை மாநில அரசு என்கிற குற்றச்சாட்டினையும் மாநில அரசுக்கு எதிராக முன்வைக்கின்றனர் பொதுமக்கள்.

இந்த நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் பாஜக அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இன்றைய செய்தியாளர் சந்திப்பில், தமிழகத்தை கருப்பு, வெள்ளை, சிவப்புதான் ஆட்சி செய்யும்; காவிக்கு இங்கே இடமில்லை என தெரிவித்துள்ள அவர், காவிரி விவகாரத்தில் மும்முனை தாக்குதலில் ஈடுபட்டு வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment