ஐபிஎல்போட்டிகளை தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் …!தினகரன் எதிர்ப்பு …!

ஐபிஎல்போட்டிகளை தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் விவசாயிகளின் குரலுக்கு வலுசேர்க்கும் வகையில் ஐபிஎல் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் என்று ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. தினகரன்  ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

வரும் 7-ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்படவுள்ளன. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் எதிர் கொள்கின்றனர்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் திறந்த பேருந்தில் சென்னையை சுற்றிப்பார்த்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இது மட்டுமல்லாமல் ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தாஹிர் போன்ற வீரர்கள் தங்களது ட்விட்டர் பக்கங்களிலும் தமிழிலேயே ட்வீட் போட்டு மாஸ் காட்டி வருகின்றனர்.

இதற்கு முன் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டை வாங்கி உள்ளோம்.மீறி கிரிக்கெட் நடந்தால் மைதானத்தில் நாங்கள் யார் என காட்டுவோம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் என்று தெரிவித்தார்.

தற்போது  ஐபிஎல்போட்டிகளை தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் விவசாயிகளின் குரலுக்கு வலுசேர்க்கும் வகையில் ஐபிஎல் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் என்று ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. தினகரன்  ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment