தமிழகத்திற்கு காவிரி நீர் பெற, ராகுல் காந்தி மூலம் கர்நாடகாவிடம் வலியுறுத்த வேண்டும்” …! விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழகத்திற்கு காவிரி நீர் பெற, ராகுல் காந்தி மூலம் கர்நாடகாவிடம் வலியுறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

திருவாரூரில் நடைபெற்ற தேமுதிக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், காவிரி நீர் கோரி திமுக தமிழகத்தில் போராட்டம் நடத்தத் தேவையில்லை என்று கூறிய விஜயகாந்த், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசி, கர்நாடக அரசை தண்ணீர் திறந்துவிட கூறுமாறு வலியுறுத்த வேண்டும், என்றும் தெரிவித்தார். இதையடுத்து, சிறிது நேரம் பேசிய விஜயகாந்த், தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று தனது பேச்சை பாதியில் முடித்துக் கொண்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment