டெல்லியில் இருந்து ரஷ்யாவுக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றார்  பிரதமர் நரேந்திர மோடி!

பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து ரஷ்யாவுக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றார்.பிரதமர் மோடி சோச்சி நகரில் ரஷ்ய அதிபர் புடினுடன் இருநாட்டு உறாவுகள் மேம்பாடு உள்ளிட்டவை பற்றி பேசுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

நேற்று பிரதமர் நரேந்திர மோடி கூறிய கருத்து:

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான பேச்சுவார்த்தை இரு நாடுகளுடனான நட்புறவை வலுப்படுத்தும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆங்கிலத்திலும், ரஷ்ய மொழியிலும் டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ரஷ்ய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் சோசி ( sochi ) நகருக்கு திங்கட்கிழமை(இன்று ) செல்ல இருப்பதையும், அதிபர் புதினுடனான சந்திப்பையும் எதிர்நோக்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். புதினை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்க கூடியது என்றும் பிரதமர் கூறியுள்ளார். ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகியது உள்ளிட்ட பல்வேறு சர்வதேச மற்றும் உள்நாட்டு விவகாரங்கள், பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேசுவார்கள் என்று கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வமற்ற முறையில் நடைபெற இருக்கும் இந்த சந்திப்பிற்குப் பின் அன்றைய தினமே பிரதமர் மோடி நாடு திரும்ப இருக்கிறார்.

 

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment