காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பிரதமர் மோடி வீட்டு முன்பாக தூக்கு?அய்யாக்கண்ணு அறிவிப்பு…!

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாகண்ணு , காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பிரதமர் மோடி வீட்டு முன்பாக தூக்குப் போடும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

நஞ்சில்லா உணவு, மரபணு மாற்ற விதைகளை தடை செய்தல், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை 100 நாள் விழிப்புணர்வு நடைபயணத்தை அய்யாகண்ணு மேற்கொண்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக நேற்று மதுரைக்கு வந்த அய்யாகண்ணு தலைமையிலான விவசாயிகள், மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவை சந்தித்து மனு அளித்தனர். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடக சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்தே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு தாமதம் செய்வதாக குற்றம்சாட்டினார்.

இதற்குப் பிறகும் மத்திய அரசு செவிசாய்க்க மறுத்தால், பிரதமர் வீட்டு முன்பாக தமிழக விவசாயிகள் தூக்குப்போடும் போராட்டத்தை நடத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment