கடந்த ஒரு மாதத்தில் தமிழகம் முழுவதும் நூலகங்களில் 3.38லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு! அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களில் கடந்த ஒரு மாதத்தில் 3லட்சத்து 38ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகப் தெரிவித்துள்ளார்.

உலகப் புத்தக நாளையொட்டிச் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 4682 ஊர்ப்புற நூலகங்களை மேம்படுத்த 126கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

 

Leave a Comment