ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப. சிதம்பரத்தையும்,கார்த்தி சிதம்பரத்தையும் ஆக.7 ஆம் தேதி வரை கைது செய்ய தடை!

டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப. சிதம்பரத்தை ஆக.7 ஆம் தேதி வரை கைது செய்ய தடை நீட்டித்தது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ப.சிதம்பரம் நிதி அமைச்சராக பதவி வகித்த போது, ஏர்செல் -மேக்சிஸ் நிறுவனத்துக்கு, 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுக்கு அனுமதி அளித்த விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் அமலாக்கத்துறை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் வழக்கு இது தொடர்பாக தொடர்ந்தது.ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப. சிதம்பரத்தை ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை கைது செய்ய தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும் கார்த்தி சிதம்பரத்தையும் ஆகஸ்ட்  7 ஆம் தேதி வரை கைது செய்ய தடையை நீட்டித்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment