டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி : நாளை தொடக்கம்..!

தமிழ்நாடு பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 11-ந் தேதி முதல் ஆகஸ்டு 12-ந் தேதி வரை சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய மூன்று இடங்களில் நடைபெறுகிறது.இந்தப்போட்டியில் 8 அணிகள் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டது .  இதையொட்டி டி.என்.பி.எல். போட்டியின் மீடியா மேலாளர் டாக்டர் பாபா, கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின், இந்த்ராஜித், சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயல் அதிகாரி விசுவநாதன் ஆகியோர் நேற்று நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

Image result for டி.என்.பி.எல். கிரிக்கெட்வருகிற 11-ந்தேதி தொடங்கும் 3-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடக்க உள்ளன. மாலை 3.15 மணி, இரவு 7.15 மணி ஆகிய நேரங்களில் நடைபெறும்.இந்தப்  போட்டிகள் அனைத்தையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. நெல்லையில் முதல் சீசனில் 8 ஆட்டங்களும், 2-வது சீசனில் 13 போட்டிகளும் நடந்தன. தற்போது 14 போட்டிகள் நடத்தப்படுகிறது.

Image result for டி.என்.பி.எல். கிரிக்கெட்நெல்லையில் 11-ந் தேதி நடைபெறும் தொடக்க விழாவில் 8 அணிகளின் கேப்டன்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். மேலும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது. டிக்கெட் கட்டணம் கடந்த ஆண்டை போன்றே ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. போட்டியில் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.Image result for டி.என்.பி.எல். கிரிக்கெட்

Image result for டி.என்.பி.எல். கிரிக்கெட்

Image result for டி.என்.பி.எல். கிரிக்கெட்

Image result for டி.என்.பி.எல். கிரிக்கெட்

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment