எனக்கு அந்த மாதிரி படங்களையும் தாண்டி,இந்த மாதிரி படம் தான் பிடிக்கும்!தமிழக பாஜக தலைவர் தமிழிசை

கடந்த 2016ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததையடுத்து இவர்களின் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகியிருக்கும் படம் ‘காலா’. இதனை நடிகர் தனுஷின் ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ தயாரித்துள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள அனைத்து படங்களுக்கும் சந்தோஷ் நாராயணனே இசையமைத்துள்ள நிலையில் இப்படத்திற்கும் அவரே இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே காலா படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் காலா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் காட்சிகள் உருவான விதம் குறித்த மேக்கிங் வீடியோவை அதன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவை ரசிகர்களிடையே காலா படம் குறித்த பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படம் குறித்த ரஜினிகாந்த் மற்றும் பா.ரஞ்சித் ஆகியோரின் பேச்சு காலா படத்திற்கான எதிர்பார்ப்பை இருமடங்காக்கியது.

இன்று படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இந்நிலையில் இன்று திரைக்கு சென்று காலா படம் பார்த்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

Image result for காலா படம் பார்த்த தமிழிசை

காலா படம் கருப்பாக ஆரம்பித்து கலராக முடிந்துள்ளது.காலா படத்தில் சில வண்ணங்களை விட பல வண்ணங்கள் வந்தது. ரஜினி திரைப்பட நடிகராக அரசியலுக்கு வந்துள்ளார். நிறைய நடிகர்கள் அரசியலுக்கு வந்துள்ளனர்.

சினிமா வாழ்க்கை வேறு அரசியல் வேறு. ரஜினியின் சினிமா வாழ்க்கையையும், அரசியல் வாழ்க்கையையும் சேர்த்து வைத்து பார்க்க கூடாது. ரஜினி படத்தில் முன்பே அரசியல் இருந்தது. இது அவரின் முதல் அரசியல் படமல்ல.

நான் திரைப்படத்திற்கு மார்க் போட மாட்டேன். எங்கள் சகோதரர்கள் எல்லாம் ஒன்றாக பார்க்க ஆசைப்பட்டதால் காலா பார்த்தோம். இப்போது இந்த படம்தான் பிரபலமாகி இருக்கிறது. அதனால் பார்த்தோம்.

காதல், ஆடல், பாடலையும் தாண்டி சமூக கருத்துக் கொண்ட படம் எனக்கு பிடிக்கும். அதனால் தான் காலா படம் பார்க்க வந்தேன்.

யார் வேண்டுமென்றாலும் அரசியல்வாதி ஆகலாம். இயக்குனரும் அரசியல்வாதி ஆகலாம். காலா படத்தில் பாஜகவை விமர்சித்ததாக நான் பார்க்கவில்லை. சினிமாவை வெறும் சினிமாவாக பார்க்க வேண்டும். சமூக கருத்துகளைக் கொண்ட படம் என்பதால் காலாவை பார்த்தேன்.படத்தை அரசியலுடன் இணைந்துப் பார்த்தால் பிரிவைதான் ஏற்படுத்தும், என்றுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment