இந்தியாவில் செயற்கைக் கோள் தொடர்பான வேலை வாய்ப்புகள் அதிகம் …! இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை

இந்தியாவில் எதிர்காலத்தில் செயற்கைக் கோள் தொடர்பான வேலை வாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்பு என்று இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறுகையில்,இந்தியாவில் எதிர்காலத்தில் செயற்கைக் கோள் தொடர்பான வேலை வாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.பொறியியல் துறையின் அனைத்துப் படிப்புகளும் செயற்கைக் கோள் தயாரிப்புக்கு தேவைப்படக் கூடியவை.புதிய செயற்கைக் கோள்கள் தயாரிப்பு மட்டுமின்றி உதிரிபாகங்கள் தயாரிக்கும் பணிகளும் எதிர்காலத்தில் வளர்ச்சியடையும். அதற்கேற்ப மாணவர்கள் தங்களது கல்வித்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment