இங்கிலாந்தில் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்வதில் தீவிரம்!

இங்கிலாந்தில் விஜய் மல்லையாவிற்க்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தியாவில் உள்ள 13 வங்கியில் சுமார் ரூ.9000 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் வாங்கி மோசடி செய்து விட்டு தொழிலதிபர் விஜய் ,மல்லையா இங்கிலாந்து தப்பிச் சென்று விட்டார்.

பின்னர் இந்திய 18 வங்கிகளின் மனுவால்  லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொழிலதிபர் விஜய்மல்லையாவின் ரூ.12,500 கோடி மதிப்புள்ள சொத்துகளை கைப்பற்ற லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து இந்திய வங்கிகள் இங்கிலாந்தில் மல்லையாவிற்க்கு சொந்தமான சொத்துக்களை கைபற்ற அனுமதியளித்தது.இதனை அடுத்து பறிமுதல் செய்யும் பணியில் இந்திய வங்கிகள் தீவிரமாக உள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment