மு.க.ஸ்டாலினுக்கு பதிலளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்!

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ,கச்சா எண்ணெய்க்கான விலை சர்வதேச சந்தையில் குறைந்தால் மட்டுமே, பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

கேரளாவில் பெட்ரோல் மீதான வரியை மாநில அரசு குறைத்ததுபோல, தமிழகத்திலும் வரியை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில், பெட்ரோலுக்கு 34 சதவீதமும், டீசலுக்கு 25 சதவீதமும் மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்படுவதாக தெரிவித்தார். ஆந்திரா, தெலுங்கானாவை விட பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக்கூட்டு வரி தமிழகத்தில் குறைவு எனக் கூறிய அவர், கேரளாவில் இருப்பதை விட, தமிழகத்தில் பெட்ரோல், டீசல் குறைவுதான் என்றும் தெரிவித்தார்.

இருப்பினும், மதிப்பு கூட்டு வரியை குறைப்பது குறித்து, முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment