திருச்சி அருகே மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தைக்கு 3 ஆயுள் தண்டனைகள்!

திருச்சி  மகளிர் நீதிமன்றம், திருச்சி அருகே பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 3 ஆயுள் தண்டனைகள் வழங்கி, தீர்ப்பளித்துள்ளது. பாலக்கரை பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவரை அவரது தந்தையே பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளான்.

இதுகுறித்த புகாரின்பேரில் அச்சிறுமியின் தந்தையை கைது செய்த போலீசார், திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை முடிவடைந்த நிலையில், சிறுமியின் தந்தைக்கு 3 ஆயுள் தண்டனைகள் மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, தமிழக அரசு சிறுமிக்கு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment