அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் துணைவேந்தர் சூரப்பாவை 10 நாட்களில் மாற்றாவிட்டால் மாணவர்கள் நீதி கேட்பார்கள் – ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ், அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள சூரப்பாவை பத்து நாட்களுக்குள் மாற்றாவிட்டால், மாணவர்கள் நீதி கேட்பார்கள் என தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனத்திற்கு கண்டனம் தெரிவித்து, சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பாக, பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ் தமிழகத்தில் ஆளுநரே ஆட்சி நடத்தி வருவதாக விமர்சித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment