உங்கள் சட்டைப்பையில் கோடி, கோடியாக எடுத்துக் கொண்டு உங்களுக்கு ரூ.1000 தருகிறார்கள்…!கமல்ஹாசன்

சினிமாவில் உள்ள பிரபலத்தை வைத்து வரவில்லை என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறுகையில்,  சினிமாவில் உள்ள பிரபலத்தை வைத்து வரவில்லை.நல்ல அடித்தளத்தை வைத்தே அரசியலுக்கு வந்துள்ளேன். மக்கள் நீதி மய்யத்தின் செயல்பாடுகளை உலகமே போற்றத் தொடங்கியுள்ளது. செயலற்று இருக்கும் இடம் மக்களுக்கு பயன்படாது. அதை பயனுள்ளதாக மாற்றும் கடமை எல்லோருக்கும் உண்டு. உங்கள் சட்டைப்பையில் கோடி, கோடியாக எடுத்துக் கொண்டு உங்களுக்கு ரூ.1000 தருகிறார்கள். அமைதியாக இருக்கும் இடத்தில் சாதிக்கலவரத்தை உருவாக்க அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்றும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment