#Breaking:சற்று ஆறுதல்…தாக்குதல் வேகத்தை குறைத்த ரஷ்ய படைகள் – உக்ரைன் ராணுவம் அறிவிப்பு!

தாக்குதல் வேகத்தை ரஷ்ய படைகள் குறைத்துள்ளதாக உக்ரைன் ராணுவம் அறிவிப்பு.

நேட்டோ நாடுகள் அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த பிப்.24 ஆம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது.இதனைத் தொடர்ந்து,தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.எனினும்,பதிலுக்கு உக்ரைன் வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இவ்வாறான சூழலில்,ரஷ்யாவுடன் பேச்சு வாத்தை நடத்துவதற்காக உக்ரைன் குழு பெலாரஸ் நாட்டிற்கு சென்றடைந்துள்ளது.உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள உக்ரைன் -ரஷ்யா இடையேயான போர் இந்த பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகள் மத்தியிலும் எழுந்திருந்தது.

இந்நிலையில்,தாக்குதல் வேகத்தை ரஷ்ய படைகள் குறைத்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ஒலித்து வந்த விமான தாக்குதலுக்கான எச்சரிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

இதன்காரணமாக,பொதுமக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.