பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை …!எந்த அறிக்கையையும் மத்திய உள்துறைக்கு அனுப்பவில்லை…!ஆளுநர் மாளிகை மறுப்பு

ராஜிவ் கொலை வழக்கு தொடர்பாக ஆலோசனை பெற மத்திய உள்துறைக்கு ஆளுநர் எந்த அறிக்கையையும் அனுப்பவில்லை என்று ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது.

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,  உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், இது தொடர்பான வழக்கில்,  அவர்கள் 7பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரைக்க, தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என தெரிவித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் கிடைத்ததும், ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என ஏற்கெனவே அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்திருந்தார்.

Image result for தமிழக

அந்த வகையில், சென்னை தலைமை செயலகத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அமைச்சரவைக் கூட்டம் கூடியது. இதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. 2 மணி நேரமாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்தது. இதில், பல்வேறு தீரமானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநருக்கு பரிந்துரைக்க, அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Image result for ஆளுநர் மாளிகை

பின்னர்   நேற்று முன்தினம் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கையை அனுப்பியதாக தகவல் வெளியானது .ஆனால் தற்போது ஆளுநர் மாளிகை தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கையை அனுப்பவில்லை என்று தெரிவித்துள்ளது.

Image result for பன்வரிலால்

இந்த விவகாரத்தில் முடிவெடுக்க தேவையான ஆலோசனைகள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.மேலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டப்படி நியாயமான முறையில் உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Leave a Comment