யாரை அரியணையில் ஏற்றுவது என மக்களே முடிவு செய்வர் – முதல்வர் பழனிசாமி

யாரை அரியணையில் ஏற்றுவது என மக்களே முடிவு செய்வர் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.இதனால் தமிழக கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றது.இதனிடையே இன்று கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.இதனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்2021-ஆம் ஆண்டு  திமுகவை ஆறாவது முறையாக அரியணை ஏற்றுவோம் என்று தெரிவித்தார்.இந்நிலையில் இது குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதில் அளித்த முதலமைச்சர், தமிழகத்தில்  2021- ஆம் ஆண்டு எந்த கட்சியை அரியணையில் ஏற்ற வேண்டும் என்பதை மக்களே முடிவு செய்வார்கள்.ஸ்டாலின் அல்ல என்று தெரிவித்தார்.