பட்ஜெட்_க்கு முன் வழக்கமாக அல்வா தயாரித்த மத்திய அமைச்சர்கள்…!!

2019-20ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தயாரிக்கும் பணிக்கு முன்பாக மத்திய அமைச்சர்கள் அல்வா கிண்டி தொடங்கி வைத்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக அல்வா கிண்டி மத்திய அமைச்சர்கள் அனைவருக்கும் பரிமாறுவது வழக்கம். அந்த வகையில் இன்று டெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சக தலைமை அலுவலகத்தில் மத்திய இணை அமைச்சர்கள் ஷிவ் பிரதாப் சுக்லா, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மத்திய பட்ஜெட் அறிக்கையை தயாரிக்கும் முன் பணியை அல்வா கிண்டி தொடங்கி வைத்தனர். இதையடுத்து கிண்டிய அல்வா_வை அனைவருக்கும் பரிமாறினர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment