தமிழகத்தில் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

தமிழகத்தில் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பால்வளம், பால் பண்ணை வளர்ச்சித்துறை ஆணையராக ஜி.பிரகாஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கனிமவளத்துறை மேலாண் இயக்குநராக சுதீப் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவன செயல் இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி அருண்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

#Breaking:போக்குவரத்து துறை ஆணையராக நடராஜன் ஐஏஎஸ் நியமனம்- தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவிப்பு!

அரசு சிறப்புச் செயலாளர் எஸ்.நடராஜன் ஐஏஎஸ் அவர்கள் போக்குவரத்துத் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு,போக்குவரத்து ஆணையர் துணைப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார். தமிழக போக்குவரத்து துறை ஆணையராக நடராஜன் ஐஏஎஸ் அவர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அவர்கள் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: “திரு எஸ். நடராஜன், ஐஏஎஸ் (2005), அரசு சிறப்புச் செயலாளர், போக்குவரத்துத் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு,போக்குவரத்து ஆணையர் துணைப் … Read more

கொரோனா தடுப்பு – தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆலோசனை!

கொரோனா தடுப்பூசி பணி குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா பரவல் மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.  தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், காணொலி … Read more