தீய சக்தியையும், அதர்மத்தையும் எதிர்த்து உண்மையான தர்ம யுத்தம் இப்போதுதான் தொடங்குகிறது – டிடிவி தினகரன்

வாக்குகள் நிச்சயம் சிதறாது, மக்கள் அனைவரும் அமமுகவிற்கு தான் வாக்களிப்பார்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அமமுக கூட்டணி குறித்து இரு தினங்களில் இறுதி செய்யப்படும். மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி குறித்து பேசியதாக வந்த தகவலில் உண்மையில்லை. அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் அமைப்பதற்குத்தான் அமமுக தொடங்கப்பட்டது. அம்மாவின் உண்மையான ஆட்சியை அமைக்க பாடுபடும். நாங்கள் மாபெரும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் தேர்தலில் போட்டியிடுகிறோம். சட்டமன்ற தேர்தலில் … Read more

அமமுகவில் நாளை வேட்பளர் நேர்காணல்., கடைசி நாளான இன்று விருப்ப மனு விநியோகம்.!

அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் நாளை மற்றும் நாளை மறுநாள் வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என அறிவித்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக தங்களுடைய கூட்டணி, தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் நேர்காணல் என கடந்த ஒரு வாரமாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இரு கட்சிகளும் தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு வழங்கி ஒப்பந்தம் கையெழுத்தாகி வருகிறது. மேலும் இரு கட்சிகளிலும் வேட்பாளர் நேர்காணல் … Read more

ஜெயலலிதாவின் கனவை தினகரனும் நிறைவேற்றுவார் என நம்புகிறோம் – சிடி ரவி, பாஜக

ஜெயலலிதாவின் கனவை தினகரனும் நிறைவேற்றுவார் என சிடி ரவி கூறியது அமமுகவுக்கு பாஜக சூசகமாக அழைப்பு விடுப்பதாக கேள்வி எழுந்துள்ளது. சென்னை தியாகராய நகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி, சசிகலாவின் முடிவை பாஜக வரவேற்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவை அதிமுக – பாஜக கூட்டணி நிறைவேற்றும். அம்மாவின் ஆட்சி மலர வேண்டும் என்பதற்காகத்தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். இதற்காக தான் தொடர்ந்து கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து … Read more

சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியதற்கு இதுதான் காரணமாம் – சகோதரர் திவாகரன்

சசிகலாவின் இடத்திற்கு தான் வரவேண்டும் என நீண்ட நாட்களாகவே டிடிவி தினகரன் திட்டம் தீட்டி வந்தார் என்று திவாகரன் தெரிவித்துள்ளார். சசிகலா தீவிர அரசியல் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென நான் அரசியல் இருந்து ஒதுங்குவதாக நேற்று சசிகலா அறிவித்திருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சசிகலாவின் இந்த அறிவிப்பு பலரையும் பலவிதமாக யோசிக்க வைக்கிறது. அரசியலில் ஒதுங்குவதற்கு பலரும் பல காரணங்கள் கூறி வருகிறன்றனர். இந்நிலையில் சசிகலா அறிவிப்பிற்கு இது தான் காரணம் … Read more

அமமுக குள்ளநரிகள் கூட்டம்., அதிமுக சிங்கங்கள் இருக்கின்ற கூட்டம் – அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவில் சசிகலா, தினகரனை சேர்க்கப்பட வாய்ப்பு இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் காலத்தில் இருந்த எழுச்சியை தற்போதும் காண முடிகிறது என்று அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்ய தலைமை செயலகத்திற்கு வந்தர்களை காண்பித்து தெரிவித்துள்ளார். இந்த எழுச்சியை பார்க்கும் போது எம்ஜிஆர், ஜெயலலிதாவின் அலை தமிழகத்தில் வீசுகின்ற நிலையில், எதிர்க்கட்சிகள் எல்லாம் காணாமல் போய் எல்லா தொகுதிகளிலும் … Read more

எங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டால் பாஜக, அதிமுகவுடன் கூட்டணிக்கு தயார் – டி.டி.வி தினகரன்

திமுகவை எதிர்க்கும் கட்சிகள் அமமுக தலைமையில் வந்தால் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க தயார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகர் இல்லத்தில் சசிகலாவுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அமமமுக தலைமையில் கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகிறோம். சட்டப்பேரவை தேர்தலில் அமமுக தலைமையில்தான் கூட்டணி அமையும். தேர்தல் கூட்டணி முடிவானதும் தெரிவிக்கப்படும். கூட்டணி குறித்து அமமமுக நிர்வாகிகள் ஒவ்வொரு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். … Read more

மனதில் பட்டதை துணிச்சலாக பேசியும், செயல்பட்டும் வந்தவர் – தா.பாண்டியன் மறைவு குறித்து தினகரன் ட்வீட்

தா.பாண்டியன் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.இந்நிலையில் அவரது மறைவு குறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பெரியவர் தா.பாண்டியன் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அவர், சிறந்த இடதுசாரி சிந்தனைவாதியாகவும், மக்களை ஈர்த்த பேச்சாளராகவும், … Read more

கார்த்தி சிதம்பரம் சொல்லியதில் உண்மையில்லை., அது நடக்காது – டிடிவி தினகரன்

அதிமுகவில் அமமுக இணையும் என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் சொல்லியதில் உண்மையில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அமமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக சென்னையில் செய்தியாளர்களிடம் அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், அதிமுகவில் அமமுக இணையும் என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் சொல்லியதில் உண்மையில்லை என்றும் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஒன்றாக இணைய வேண்டும் என்ற கருதத்தை சசிகலா கூறியிருக்கிறார் எனவும் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய … Read more

ரூ.1.70 லட்சம் கோடி கடன் அதிகமாகியிருப்பது பெரும் கவலை அளிக்கிறது-டிடிவி தினகரன் ..!

ஒரே ஆண்டில் ரூ.4 லட்சம் கோடியில் இருந்து ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருப்பது பெரும் கவலை அளிக்கிறது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் கடன் சுமை தற்போது ரூ.4.85 லட்சம் கோடியாக உள்ள நிலையில், அடுத்த ஓராண்டில் ரூ.5.7 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் கடன் தொகை ஒரே ஆண்டில் ரூ.4 லட்சம் கோடியில் இருந்து … Read more

அரசியல்வாதிகள் பேசிக் கொண்டிருந்தால் தான் உயிரோடு இருப்பதாக அர்த்தம் – அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

அதிமுகவை மீட்டெடுப்போம் என டிடிவி தினகரன் கூறுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அதிமுகவை கைப்பற்றுவோம் என டிடிவி தினகரன் பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அரசியல்வாதிகள் பேசிக் கொண்டிருந்தால் தான் உயிரோடு இருப்பதாக அர்த்தம் எனவும் கூறியுள்ளார். டிடிவி தினகரனின் பேச்சும் அப்படித்தான் என்று அமைச்சர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சசிகலா நான்கு ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு வெளியே … Read more