தீய சக்தியையும், அதர்மத்தையும் எதிர்த்து உண்மையான தர்ம யுத்தம் இப்போதுதான் தொடங்குகிறது – டிடிவி தினகரன்

வாக்குகள் நிச்சயம் சிதறாது, மக்கள் அனைவரும் அமமுகவிற்கு தான் வாக்களிப்பார்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அமமுக கூட்டணி குறித்து இரு தினங்களில் இறுதி செய்யப்படும். மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி குறித்து பேசியதாக வந்த தகவலில் உண்மையில்லை. அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் அமைப்பதற்குத்தான் அமமுக தொடங்கப்பட்டது.

அம்மாவின் உண்மையான ஆட்சியை அமைக்க பாடுபடும். நாங்கள் மாபெரும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் தேர்தலில் போட்டியிடுகிறோம். சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறேன். வாக்குகள் நிச்சயம் சிதறாது, மக்கள் அனைவரும் அமமுகவிற்கு தான் வாக்களிப்பார்கள் என்ற எண்ணத்தில் தான் வரும் சட்டமனற்ற தேர்தலில் போட்டியிடுகிறோம்.

குருசேத்திர யுத்தத்தில் துரியோதன கூட்டத்தை எதிர்த்து பாண்டவர்களாகிய நாங்கள் போராடுகிறோம். தீய சக்தியையும், அதர்மத்தையும் எதிர்த்து உண்மையான தர்ம யுத்தம் இப்போதுதான் தொடங்குகிறது. நாங்கள் தர்மத்தின் பக்கம் நிற்கிறோம். ஆகையால் எங்களுக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என கூறிய டிடிவி தினகரன், வேட்பாளர் பட்டியல் மார்ச் 10-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்