ஜெயலலிதாவின் கனவை தினகரனும் நிறைவேற்றுவார் என நம்புகிறோம் – சிடி ரவி, பாஜக

ஜெயலலிதாவின் கனவை தினகரனும் நிறைவேற்றுவார் என சிடி ரவி கூறியது அமமுகவுக்கு பாஜக சூசகமாக அழைப்பு விடுப்பதாக கேள்வி எழுந்துள்ளது.

சென்னை தியாகராய நகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி, சசிகலாவின் முடிவை பாஜக வரவேற்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவை அதிமுக – பாஜக கூட்டணி நிறைவேற்றும். அம்மாவின் ஆட்சி மலர வேண்டும் என்பதற்காகத்தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். இதற்காக தான் தொடர்ந்து கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் கனவு ஒருங்கிணைந்த அதிமுகத்தான் என்றும் ஜெயலலிதாவின் கனவை தினகரனும் நிறைவேற்றுவார் என நம்புகிறோம் எனவும் தெரிவித்துள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக வாக்குகளை பிரிப்பாரா என்ற கேள்விக்கு இன்னும் காலம் இருக்கிறது என்று சிடி ரவி குறிப்பிட்டுள்ளார். இதன்படி அதிமுக – பாஜக கூட்டணிக்கு அமமுகவிற்கு பாஜக சூசகமாக அழைப்பு விடுகிறதா என்று கேள்வியும் எழுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்