அரசியல்வாதிகள் பேசிக் கொண்டிருந்தால் தான் உயிரோடு இருப்பதாக அர்த்தம் – அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

அதிமுகவை மீட்டெடுப்போம் என டிடிவி தினகரன் கூறுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அதிமுகவை கைப்பற்றுவோம் என டிடிவி தினகரன் பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அரசியல்வாதிகள் பேசிக் கொண்டிருந்தால் தான் உயிரோடு இருப்பதாக அர்த்தம் எனவும் கூறியுள்ளார். டிடிவி தினகரனின் பேச்சும் அப்படித்தான் என்று அமைச்சர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சசிகலா நான்கு ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு வெளியே … Read more

தமிழிசை உடலில் ஓடுவது காங்கிரஸ் இரத்தம்…! பொறுத்திருந்து பாருங்கள்…! – ஓ.எஸ்.மணியன்

தமிழிசை சௌந்தரராஜன் உடலில் ஓடுவது காங்கிரஸ் இரத்தம். தற்போது பாஜக அரசால், கவர்னராக நியமன செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி நீக்கப்பட்டதை தொடர்ந்து, தெலுங்கானா ஆளுநரான டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், நேற்று புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றார். நாகப்பட்டினத்தில் ஓ.எஸ்.மணியன் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களுக்கு பேட்டி  அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழிசை சௌந்தரராஜன் உடலில் ஓடுவது காங்கிரஸ் இரத்தம். தற்போது பாஜக அரசால், கவர்னராக நியமன … Read more

சசிகலா அதிமுக என்றால், தினகரனுடன் தொடர்பில் இருப்பது ஏன்? – ஓ.எஸ்.மணியன்

சசிகலா அதிமுகவை சேர்ந்தவர் என்றால், தினகரனுடன் தொடர்பில் இருப்பது ஏன் என்றும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் விவசாய பயிர் கடன் தள்ளுபடி போன்று நெசவாளர்களுக்கு எதாவது தள்ளுபடி செய்யப்பட வாய்ப்பு இருக்கின்றதா என்றும் இந்த கொரோனா சூழலில் அவர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் கூறிய அமைச்சர், முதல்வர் பழனிச்சாமி சேலத்தில் மிகப்பெரிய … Read more