மாடு முட்டி உயிர் பிழைத்து கீழே விழுந்தவர் மீது லாரி ஏறியதால் பறிபோன உயிர்!

மாடு முட்டி உயிர் பிழைத்து கீழே விழுந்தவர் மீது லாரி ஏறியதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த புதுத்தெருவை சேர்ந்த ரவி என்பவர் நேற்றிரவு சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். இந்நிலையில், சாலையில் படுத்துக்கிடந்த மாடுகள் வாகன ஒலிகளை பார்த்து மிரண்டுள்ளது. அச்சமயம் அவ்வழியே வந்த ரவியை அங்கிருந்த மாடு ஒன்றெனு முட்டியுள்ளது. இதனால் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்துள்ளார். அப்பொழுது சாலையில் வந்துகொண்டிருந்த டாரஸ் லாரி ரவி மீது ஏறி … Read more

ஒடிசாவில் ஆட்டோ ரிக்‌ஷாவில் லாரி மோதி 3 பேர் உயிரிழப்பு, 9 பேர் காயம்.!

ஒடிசாவில் ஆட்டோ ரிக்‌ஷாவில் லாரி மோதியதில் 3 பேர் உயிரிழப்பு, 9 பேர் காயமடைந்தனர். ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் நேற்று லாரி மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 9 பேர் காயமடைந்தனர். கொரோனா தொற்றுநோயால் ஒடிசா முழுவதும் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், பழங்குடியினர் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் அரிசி இலவசமாக விநியோகிக்க மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில், அதற்ககாக தோகோட்டா கிராமத்திலிருந்து சுலியாபாவுக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. … Read more

லாரி மீது பேருந்து மோதி விபத்து.! பேருந்து தீப்பிடித்ததில் 20 பேர் உயிரிழப்பு.!

உத்தரப்பிரதேசத்தில் லாரி மீது பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியது.இதில் 20 பேர் இறந்தனர். இந்த விபத்தில் இறந்த குடும்பத்தில் இரண்டு லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார். உத்தரப்பிரதேசத்திலிருந்து ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரை நோக்கி 45 பயணிகள் கொண்டு ஒரு சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது.அப்போது இந்த பேருந்து கணோஜ் மாவட்டத்தில் உள்ள சிலோய் என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது பேருந்து எதிர்பாராதவிதமாக லாரி மீது … Read more

60 அடி கிணறுக்குள் விழுந்த லாரி.. 25,000 கிலோ சர்க்கரை நாசம்..!!

நாமக்கல் மாவட்டத்தில் இருந்து நெல்லை மாவட்டத்திற்கு வினியோகம் செய்ய வந்த லாரி கிணறில் மூழ்கியது. மலை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு கிணறில் மூழ்கி 25,000 கிலோ சர்க்கரை நாசமானது. நாமக்கல் மாவட்டமான மோகனுரில் சர்க்கரை ஆலையில் இருந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்வதற்காக ஒரு லாரியில் 25,000 கிலோ சர்க்கரை மூட்டைகள் வந்துள்ளது. இந்த லாரியானது நேற்று காலை நெல்லை பக்கத்தில்  தாழையூத்தில் இருக்கும் அரசு அரிசி ஆலைக்கு வந்துள்ளது. அரசி குடோனுக்கு … Read more

சீனாவில் லாரி -பஸ் நேருக்கு நேர் மோதல்..! இந்த கோர விபத்தில் 36 பேர் பலி ..!

சீனாவில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜியாங்சு மாகாணத்தில் 60 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது எதிரே வந்த  லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.இந்த இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலே 36 பயணிகள் இறந்தனர். பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்து டயர் வெடித்ததால் நிலைதடுமாறி பேருந்து லாரி மீது மோதியது என கூறப்படுகிறது. … Read more

காஷ்மீரில் பரபரப்பு !ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களுடன் லாரி பறிமுதல்

ஜம்மு காஷ்மீரில் கத்துவா பகுதியில் ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களுடன் லாரி சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இதற்கு பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.இதனை தொடர்ந்து காஷ்மீரில் நடைபெறும் அடக்குமுறைகள் தொடர்பாக உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக முசாபராபாத்தில் வரும் 13- ஆம் தேதி … Read more

தென் ஆப்பிரிக்காவில் லாரி மீது ரயில் மோதி விபத்து !18 பேர் உயிரிழப்பு…..

தென் ஆப்ரிக்காவில் லெவல் கிராசிங்கில் வந்த லாரியுடன் மோதியதில் ரயில் தடம் புரண்டு விபத்து .இதில் 18 பேர் உயிரிழந்தனர் தென் ஆப்பிரிக்காவில் எலிசபெத் துறைமுகம்- ஜோகனஸ்பர்க் இடையே 700க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்த விரைவு ரயில் விபத்தில் சிக்கியது. இதில் 18 பேர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். லெவல் கிராசிங்கில் லாரி ஒன்றுடன் வேகமாக மோதிய ரயில் தடம்புரண்டதால் இந்த கோர விபத்து நேரிட்டது. இதனால் ரயிலின் ஓரிரு பெட்டிகளில் … Read more