லாரி மீது பேருந்து மோதி விபத்து.! பேருந்து தீப்பிடித்ததில் 20 பேர் உயிரிழப்பு.!

  • உத்தரப்பிரதேசத்தில் லாரி மீது பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியது.இதில் 20 பேர் இறந்தனர்.
  • இந்த விபத்தில் இறந்த குடும்பத்தில் இரண்டு லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்திலிருந்து ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரை நோக்கி 45 பயணிகள் கொண்டு ஒரு சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது.அப்போது இந்த பேருந்து கணோஜ் மாவட்டத்தில் உள்ள சிலோய் என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டு இருந்தது.

அப்போது பேருந்து எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதியது.இதனால் பேருந்து தீப்பிடித்து எரிந்தது.பேருந்தில் இருந்த சில பயணிகள் வெளியேற முடியாமல் தவித்தனர்.

சில பயணிகள் பேருந்தில் இருந்து குதித்து தப்பித்து விட்டனர். இந்த விபத்தில் 20 பேர் இறந்ததாகவும் , 21பயணிகள் படுகாயம் அடைந்ததாகவும் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளனர்.

மேலும் படுகாயமடைந்த பயணிகள் அனைவரும் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்தில் இறந்த குடும்பத்தில் இரண்டு லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்து உள்ளார்.

author avatar
murugan