திருச்சி BHEL-ல் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் – வைகோ கோரிக்கை

திருச்சி பெல் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணிகளை தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தல். இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சியில் உள்ள பெல் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணிகளை உடனே தொடங்க ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். திருச்சி பாரத் மிகுமின் நிறுவனத்தில் (BHEL), மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்ஸிஜன் உற்பத்தி தொழிற்கூடத்தில் பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ளாதால், கடந்த … Read more

தவறான கணக்கெடுப்பு… தமிழக ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்பாதீர்கள் – பிரதமருக்கு முதல்வர் கடிதம்

தமிழகத்திற்கான ஆக்சிஜன் தேவையை உறுதி செய்ய வேண்டும் என ரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தில் இருந்து ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு திருப்பிவிடப்பட்ட விவகாரம் குறித்து முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது. ஸ்ரீபெரம்புதூர் ஆலையில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பிற மாநிலங்களுக்கு அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்திற்கான ஆக்சிஜன் தேவையை உறுதி செய்ய வேண்டும் … Read more

தமிழகத்தில் முழு ஊரடங்கு நாட்கள் அதிகரிப்பா? – மேலும் கட்டுப்பாடுகளை விதிக்க அதிகாரிகள் ஆலோசனை!!

இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஏற்கனவே உள்ள இரவுநேர ஊரடங்கு நேரம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டவது அலை வேகமாக பரவி வருவதால் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவுநேர ஊரடங்கும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. எனினும், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வருவதால், தமிழகத்தில் முழு ஊரடங்கை வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து திங்கட்கிழமை … Read more

சற்றுநேரத்தில் முதல்வரை சந்திக்கிறார் தலைமை செயலர்!!

சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் சற்று நேரத்தில் சந்திக்கவுள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை, தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன், சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் இன்னும் சற்று நேரத்தில் சந்திக்க உள்ளனர். கொரோனா குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசித்த விவரங்கள் பற்றி முதல்வரிடம் எடுத்துரைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

#BREAKING: இன்று ஒரே நாளில் 12 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு.!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு எண்ணிக்கை. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் புதிதாக 12,652 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை ஆக 10,37,711 அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 3,789 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இன்று மேலும் 59 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் உயிரிழப்பு எண்ணிக்கை 13,317 … Read more

தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை.!

தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவினருடன் ஆலோசனை. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவினருடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

#BREAKING: தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியது.!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது என சுகாதாரத்துறை அறிவிப்பு. தமிழகத்தில் இன்று ஒரேநாளில் புதிதாக 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 3,750 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. இன்று மேலும் 53 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் உயிரிழப்பு எண்ணிக்கை 13,258 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் … Read more

இரவு நேர ஊரடங்கு ஏன்? பின்னணி என்ன? – அதிகாரிகள் விளக்கம்!!

இரவிலும், ஞாயிற்றுக்கிழமையும் கட்டுப்பாடு இருப்பதால் மக்களுக்கும் அரசுக்கும் பொருளாதார பாதிப்புகள் பெரிதாக இருக்காது.  தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பிறப்பிக்கப்பட்டுள்ள இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் ஆகியவை போதுமானதாவையா? என பல்வேறு கேள்வி எழுந்துள்ளது. எனினும் இதற்கு அரசு அதிகாரிகள் தரப்பில் சில விளக்கங்கள் கூறப்படுகிறது. மக்கள் மத்தியில் கொரோனா குறித்த எச்சரிக்கை உணர்வு ஏற்படுத்தவும், நிலைமை தற்போது இயல்பாக இல்லை என உணர்த்துவதற்கு இந்த நடவடிக்கைகள் உதவும் … Read more

ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும் – தமிழக அரசு உத்தரவு

அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, நீண்ட மாதங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகள் கொரோனா பரவல் காரணமாக மீண்டும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில், அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆன்லைனில் மட்டுமே வகுப்புகளை நடத்த வேண்டும் என்றும் தேர்வுகளையும் ஆன்லைனில் … Read more

கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள் தேவைக்கேற்ப தீவிரப்படுத்தப்படும் – தலைமைச் செயலாளர்

தமிழகத்தில் கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள் தேவைக்கேற்ப தீவிரப்படுத்தப்படும் என தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையில் கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் காணொளி மூலம் கலந்துகொண்டபின் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் கொரோனாவை தடுக்க தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் அலட்சியமாக … Read more