வெள்ள நிவாரணம்: நடிகர் விஜய் நிவாரண உதவி வழங்கும் நிகழ்வில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள்.!

Nellai - Thalapathy

தென்மாவட்டங்களில் பெய்த அதீத கனமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். இதனால், பாதிகப்பட்ட மக்களுக்கு  உதவி செய்ய நினைத்த நடிகர் விஜய், நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினார். முதலில் நிவாரணம் வழங்குவதற்காக நடிகர் விஜய் தனியார் திருமண மண்டபத்திற்கு வந்தார். அவரை பின்தொடர்ந்து ரசிகர்கள் வந்ததால், பாதுகாப்புக்கு நின்றிருந்தவர் திடீரென மண்டபத்தின் கதவை மூட, அது எதிர்பாராத விதமாக நடிகர் விஜயின் முதுகு பகுதியை தாக்கி கீழே தடுக்கி விழ பார்த்தார். … Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார் நடிகர் விஜய்!

Thalapathy Vijay

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார் நடிகர் விஜய். கடந்த 17,18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. வரலாறு காணாத கனமழையால், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வெள்ளத்தால் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து தவிப்புக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில், நடிகர் விஜய் நலத்திட்ட உதவிகளை நேரடியாக வழங்க … Read more

1000 பேருக்கு இன்று நலத்திட்ட உதவிகளை வழங்கும் விஜய்.!

vijay makkal iyakkam - vijay

கடந்த 17,18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. வரலாறு காணாத கனமழையால், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வெள்ளத்தால் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து தவிப்புக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில், நடிகர் விஜய் நலத்திட்ட உதவிகளை நேரடியாக வழங்க உள்ளார்.  நெல்லை கேடிசி நகரில் உள்ள மாதா மஹாலில்  காலை 12 மணிக்கு நடைபெறும் இந்த … Read more

முதற்கட்ட நிவாரண பணிகள்.. அரசியல் செய்ய வேண்டாம்.! அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்.!  

Minister Udhayanidhi stalin - Tirunelveli flood relief

தென் மாவட்டத்தில் பெய்த அதீத கனமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்கள் வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பெரு வெள்ளத்தால், உயிர்சேதம், பொருட்சேதம், கால்நடை உயிர்சேதம் என பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் பல்வேறு இடங்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இரு மாவட்ட வெள்ள பாதிப்பு பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு பின்னர் வெள்ள நிவாரண உதவி தொகை விவரங்களை அறிவித்தார். ரேஷன் கார்டுதரர்களுக்கு தலா 6000 ரூபாய், … Read more

தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது- நிர்மலா சீதாராமன்..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மற்றும் குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், வெள்ள பாதிப்புகள் குறித்தும்  இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  கடந்த 2015 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட அம்பத்தூர் தொழில்பேட்டை 2023 வெள்ளத்திலும் பாதிக்கப்பட்டது.  இதுவரை எந்த மாநிலத்திலும் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசிய … Read more

தூத்துக்குடியில் சோகம்…அக்கா கண்முன்னே வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த தங்கை-தந்தை.!

Thoothukudi flood death

கடந்த ஞாயிற்று கிழமை முதல் திருநெல்வேலி , தூத்துக்குடி, கன்னியாகுமரி , தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக இதுவரை வெள்ளம் தேங்காத பகுதிகளில் எல்லாம் மழைநீர் தேங்கி உள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தில் தத்தளித்த மக்களை மீட்க மீட்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் மக்கள் உணவும், தண்ணீர் இன்றி தவிக்கின்றனர். மேலும், மூன்று நாட்களுக்கும் மேலாக மின்சரம் இல்லாமல் … Read more