சத்தீஸ்கரின் ஒரு மாவட்டத்தில் திரையரங்கு மீண்டும் திறக்க அனுமதி.!

சத்தீஸ்கரில் மல்டிபிளெக்ஸ் மற்றும் திரையரங்குகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில் 50 சதவீத இருக்கை வசதிகளுடன் மல்டிபிளெக்ஸ் மற்றும் திரையரங்குகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராய்ப்பூரில் வருகின்ற சனிக்கிழமை அதாவது தீபாவளி நாள் அல்லது ஞாயிற்றுக்கிழமைக்குள் புதிய படங்கள் திரையிட வாய்ப்பு இருக்கிறது என்று அம்மாவட்ட ஒரு திரையரங்க உரிமையாளர் தெரிவித்தார். ஒரு உத்தரவில், கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை சரிபார்க்க … Read more

தீபாவளி வரை இலவச அனுமதி – கடலூர் தியேட்டர் நிர்வாகம்

தீபாவளி வரை இலவச அனுமதி என்று கடலூரில் ஒரு திரையரங்கு உரிமையாளர் தெரிவித்துள்ளார். திரையரங்குகளில் புது திரைப்படங்களை திரையிட விபிஎப் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து தீபாவளிக்கு புது படங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இயங்க தொடங்கியுள்ளது . இந்நிலையில், தமிழகத்தில் இன்று  திறக்கப்பட்ட நிலையில், கடலூரில் உள்ள கிருஷ்ணாலய திரையரங்களில் ரசிகர்களுக்கு தீபாவளி வரை இலவச அனுமதியளிக்கப்படும் என்று உரிமையாளர் அறிவித்துள்ளார்.

திருவள்ளூரில் திரையரங்குகளை திறக்க உரிமையாளர்கள் மறுப்பு.!

திருவள்ளூர் மாவட்டத்தில் திரையரங்குகளை திறக்க உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார்கள். தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக கடந்த 8 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், தமிழக முழுவதும் இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்படுகிறது. தீபாவளிக்கு புது படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் விபிஎப் கட்டணம் செலுத்த எதிர்ப்பு தெரிவித்து புது திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்படாது என்று நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது. அதற்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் படத்தின் வசூலில் 50% -ஐ அளித்தால் விபிஎப் கட்டணத்தை … Read more

மகாராஷ்டிராவில்  திரையரங்குகள் திறக்க அனுமதி

மகாராஷ்டிராவில்  திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், முதலில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்ட மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்தது.தற்பொழுது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மத்திய அரசு தளர்வுகளுடனான ஊரடங்கை அக்டோபர் 31 -ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30ஆம் தேதி வரை … Read more