தீபாவளி வரை இலவச அனுமதி – கடலூர் தியேட்டர் நிர்வாகம்

தீபாவளி வரை இலவச அனுமதி என்று கடலூரில் ஒரு திரையரங்கு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

திரையரங்குகளில் புது திரைப்படங்களை திரையிட விபிஎப் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து தீபாவளிக்கு புது படங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இயங்க தொடங்கியுள்ளது .

இந்நிலையில், தமிழகத்தில் இன்று  திறக்கப்பட்ட நிலையில், கடலூரில் உள்ள கிருஷ்ணாலய திரையரங்களில் ரசிகர்களுக்கு தீபாவளி வரை இலவச அனுமதியளிக்கப்படும் என்று உரிமையாளர் அறிவித்துள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.