சேலத்தில் பிரச்சாரம் செய்து வந்த திமுக எம்பி பார்த்திபனுக்கு கொரோனா தொற்று!

சேலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த திமுக மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போது பல்வேறு இடங்களிலும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என பலரும் பிரச்சாரத்தில் ஈடுபட துவங்கி உள்ளனர். இந்நிலையில், தனது கட்சிக்கு ஆதரவாக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்களும், மூத்த நிர்வாகிகளும் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ் … Read more

வனக்காவலர்களுக்கு கொலை மிரட்டல் !சேலம் எம்பி எஸ்.ஆர் பார்த்திபன் மீது வழக்கு

வனக்காவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சேலம் எம்பி எஸ்.ஆர் பார்த்திபன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடந்து முடிந்த மக்களவை தேர்தலில்  எஸ்.ஆர் பார்த்திபன் திமுக சார்பில் சேலம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.இந்த நிலையில்  எஸ்.ஆர் பார்த்திபன்  மீது வனச்சரகர் அலுவலர் திருமுருகன் மேச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், வேடன்கரடு என்ற மலைப்பகுதியில்  கள தணிக்கைக்கு சென்ற வனக்காவலர்களுக்கு  கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வனக்காவலர்களை … Read more